ஞாயிறு, பிப்ரவரி 15, 2009

இரண்டாம் தேடல்...மறுபக்கம்.- நன்றி டுமீல்ஜி சார்!

இரண்டாம் தேடல்...மறுபக்கம்.......

இம்முறை பெண் பார்க்க வருவதாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து தகவல் வந்தது.

மாப்பிள்ளை பையன் புகைப்படம் கேட்டவில்லை. அப்போதே இது பஜ்ஜி,சொஜ்ஜி பார்ட்டியாக இருக்குமோ என ஒரு சந்தேகம்.நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..

பார்த்தீங்களா... இக்காலத்தை.. இன்னும் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி

சரி விடயத்துக்கு வருவோம்..

மாப்பிள்ளை வீட்டார் விருப்பப்படி எங்களின் ஊருக்கு (மாயவரம்) வரும் நாள் தெரிவிக்கப்பட்டது...
அவர்கள் வருவதற்குள் மாப்பிள்ளை பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
அவர் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் இளநிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து அயல்நாட்டில் மணி புரிகிறாராம்.அவ்ளோ உலகளாவிய பரந்த குடும்பம்...

இதனைக் கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கியது போதும்.. ஏழைக்குடும்பப் ஆண்கள் பலர் வேலை கிடைக்காமல் படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... இந்த அயல்நாட்டுப் பணி நல்லதே.

இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறியிருந்தோம். அதனால் நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம் என ஒரு பிட்டும் போட்டார்கள்..இருந்தாலும் எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் ? என தகவல்.

காலை சிற்றுண்டியை மனதில் வைத்து விடியற்காலையிலேயே கிளம்பி விட்டார்கள்..... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம் என சொன்னார்கள். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் எம் வீட்டிற்கு வந்தார்கள்

அவர்களுடன் அவரது இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் வழக்கறிஞர் என்பதை பிறகு அவரது விவரமான குறுக்கு விசாரணையில் கண்டுகொண்டோம்.ஒரு வழியாக எம் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டினுள் அடியெடுத்து வைத்தார்கள்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.

கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னார் மாப்பிள்ளை.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் அவரிடம் யாரும் கேட்டதில்லை போலும்.. ஒருவேலை கேட்டிருந்தால் என்ற என் கற்பனை குறும்பாக மலர்ந்தது. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி என்றாகி விட்டது போல் அவர் பட்ட தவிப்பு.. அடே அப்பா....

அவர் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களின் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... என் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..

அவரும் இடையிடையே... எபபத்தான் வாம்மா மின்னல் என ஜொள்லுவார்கள் என பதட்டமாக காத்திருந்தார்.(காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).

தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுத்தார்கள்.. கொடுத்தது என் அம்மா... சஸ்பென்ஸ் தாளாமல் இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்து வாயிலும் தட்டில் மீதமிருந்ததை சட்டைப்பையிலும் போட்டுக்கொண்டார்.

அதற்குள் என் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...இந்த கதையை அவர் சொல்ல நான் ஆயிரம் முறை கேட்டதுண்டு.

எல்லாம் முடிந்து இப்போது தான் என்னை அழைத்தார் அப்பா.. நான் கையில் காபி தட்டுடன் சென்றேன்.

' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று அவர் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது என்னை நேருக்கு நேர் பார்த்தார்... பிள்ளைப்பூச்சி..கொஞம் பூசினார் போல இருந்தார்.. அரவிந்த்சாமிபோல் வடிவாக இருந்தார்... சொல்லும்படி குறை எதுவும் இல்லை. ஆனால் உதட்டோரம் அநியாயத்திற்கும் ஓவர் ஜொள்.

அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் நான் நிற்க...அவர் அம்மா, என்னை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..என்னை விட்டால் அவர் மடியிலேயே அமர்ந்திருப்பேன். ஆனால் இது ஏற்கனவே நாங்கள் பேசிவைத்த விடயமாதலால் தவிர்த்தேன். ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்கள்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. அவர் என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.

மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என அவர் நெற்றிக்கருகே இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து அப்பா கேட்க...அவர் ஏதோ பதிலை சொல்லி சமாளித்தார்...

அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே வந்தார் ..ஏப்பா இளங்கலைக்கே இந்த வீக்கம் என்றால் மாப்பிள்ளை முதுகலைவேறு படிப்பேன் என்கிறாரே..என்ன ஆகும் என கிசுகிசுத்தார்.எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று. ஆனால் அரவிந்த்சாமிக்கு அழகே அவர் முகத்தில் உள்ள மச்சம். அதுபோல் இவரது கவர்ச்சியே அந்த முன் மண்டை வீக்கம் தான் என்பதை நான் எப்படி அப்பாவிற்கு புரியவைப்பேன்.

எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி அவர்கள் விடை பெற்றார்கள். அதற்குள் முதலில் பஜ்ஜி சாப்பிட்ட பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் அழைக்க மாப்பிள்ளையின் 'டிமாண்டு' எனக்கு தெரிந்தது. ஆனால் அப்பாவுக்கு.....

எனக்கு மனம் மிக வேதனையாக இருந்தது. இவ்வளவு அழகான மாப்பிள்ளை அதுவும் அறிவு வீங்கப்பெற்ற மாப்பிள்ளை தவறுமோ என கவலை. ம்...பெண்ணாகப்போனேன்... பெற்றோர் சொல் கேட்கனும்..இல்லையெனில் அவரைக் கடத்திக்கொண்டுபோய் கை பிடித்திருக்கலாமே....

1 கருத்து:

Santhana சொன்னது…

dear,

it was interesting to read about the "penn parkkum padalam" from your wife's angle. nice story.

my best,
your lovely sister from boston.