ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

காதல் கிறுக்கல்கள்! - III

சித்தன்னவாசலின் ஓவிய‌மே
சித்த‌னையும் சிதைக்கும் சிற்ப‌மே...

அற்ப்ப‌னாகிய‌ என்னை
‍இரட்சிப்பாயா?

-------------------------

உன்
காதல் வேதங்கள் எத்தனை எத்தனை?
சொல்...காதலியே
நம் பேதங்கள் தீர...

-------------------------

நிலவுப்பெண்ணே... நிலவுப்பெண்ணே...
பூகோள பூமிப்பந்தை மறந்து
ஓர் நாள் என்னையும் சுற்றிவருவாயா?

நிலவுப்பெண்ணே.. நிலவுப்பெண்ணே...
தாமதிக்காமல் தன்னையே
தந்திட நினைக்கும்
என்னையும் ஓர் கனம் உணர்வாயா?

------------------------

உன்னை புனரவேண்டும்
எப்படி சொல்வது..
ஓ.. அன்பே
உன்னை
காதலிக்கிறேன்.

- யாரோ ஒருவர்

------------------------------

உன் உயிர் எடுக்க வேண்டும்
எப்படி செய்வது...
ஓ.. அன்பே
உன்னையே நான் கல்யாணம்
செய்துக்கறேன்

----------------------

முல்லைப்பூ மூக்குக்காரி, மூனாறு கூட்டிச் செல்லவா?
ரோசாப்பூ உதட்டுக்காரி, உத்தரவின்றி உள்ளே வரவா?
தாழம்பூ வாசனைக்காரி, தாமிரபரணி தண்ணீர் தரவா?
செவ்வந்திப்பூ மேனிக்காரி, செல்லச் சந்தம் சொல்லித் தரவா?

-----------------------------------------------

கருத்துகள் இல்லை: