திங்கள், பிப்ரவரி 14, 2011

காதல் கிறுக்கல்கள்! - II


காலை குழம்பியில் இனிப்பு வேண்டாம்...
உன் இனிய புன்னகை போதும்!
சமையலில் காரம் வேண்டாம்..
உன் காரப்பார்வை போதும்!
சுட்டெரிக்கும் சூரிய கதிரில்.. நிழல் வேண்டாம்
ஜில்லிட வைக்கும் உன் அணைப்பு போதுமே!
மொத்தத்தில்
தினம் தினம் ...உன் முத்தத்தில் என் உயிர் வாழுமே!

---------------------------------------------------

காதலி... காதலி..
அனைத்தையும் காதலி...
ஆசை அடங்க காதலி...
இன்பமாக காதலி..
ஈகையாக இதயத்தை தந்து காதலி..
உள்ளம் உருக காதலி...
யாதும் ஊரே...யாவரையும் காதலி...
எங்கே சென்றாலும் காதலி..
ஏசினாலும் காதலி...
ஐயம் கொள்ளாமல் காதலி...

சாகும் வரை காதலி
சாவையும் காதலி!

-----------------------------

வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவளே
உன் பார்வையால்
என்னை வெளிறிப்போக வைக்காதே!

-------------------------------------

மூச்சுக்காற்றால் வெப்பம் உண்டாக்கு
பருக்களின் கீற்றால் கீறல் உண்டாக்கு
‍உமிழ் நீரால் என் முகம் முழுக்க ஈரம் உண்டாக்கு
ஏன்...
ஒற்றைப்பார்வையால் எனக்கு பைத்தியம் கூட உண்டாக்கு

ஆனால்
என்னை வேண்டாம் என்ற ஒரு சொல்லில்
துன்பம் உண்டாக்காதே
பைங்கிளியே...

------------------------------------

உன் கருங்குயில் கண்ணுக்கு
கண்மை எதற்கு?

உன் ஸ்ட்ராபெர்ரி உதட்டுக்கு
சாயம் எதற்கு?

மொத்தத்தில்...
உன் சித்திர முகத்துக்கு
முகக்கவசம் எதற்கு?

உன் வெண்டை விரலுக்கு
சந்தணம் எதற்கு?

ஆனால் அழகே...
உன் அன்பு மனசுக்கு
நான் மட்டும் தானே உனக்கு!

---------------------------------

அனைவருக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை: