ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

மீண்டும் மீண்டும் வா...1

வணக்கம் நண்பர்களே!

முதன் முறையாக ஒரு தொடர் எழுதவிழைகிறேன்...என்னால் நாட்குறிப்பு கூட சரியாக எழுத முடியாது/தெரியாது .. ஆகவே இது அனைவருக்கும் ஒரு சோதனை முயற்சி தான்...
மறந்து விடாதீர்கள்...இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!

ஏதேனும் பிழைகள் இருந்தால்..சுட்டிக்காட்டி.. தட்டிக் கொடுக்க தயங்காதீர்கள்...மிக்க நன்றி!

==================================================

அழகான ஒரு நந்தவனம்...ரோட்டோரத்துல ரெண்டு சைக்கிள் மட்டும் தெரியுது...உள்ள கொஞ்சம் எட்டிப்பார்த்தால்...
அட.. நானும் நதியாவும்.. பின்னணியில் பாடல்...

"சோலைகள் எல்லாம் பூக்களைத்தூவ சுகம் சுகம் ஆ அ..
குயில்களின் கூட்டம் பாக்களைப்பாட இதம் இதம் ஆ அ..
காதல் ஊர்வலம் இங்கே...
கன்னி மாதுளம் இங்கே... "
ஒலிக்க...

"ராஜா...ஏய்... ராஜாப்பயலே... இன்னுமாடா தூக்கம்... எழுந்திரி..."அம்மாவின் குரலுடன் வழக்கமான காலை...
"இன்னைக்கு திங்கட்கிழமை.. இன்னும் அஞ்சு நாள் ஓடனும் சனி ..ஞாயிறு வர.. "மனசு புலம்பியது...
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~~~~~~~~~~~~~~~~~~
"இந்த நதியா..ரொம்ப நல்லப் பெண்ணா இருக்கா...ரொம்ப லவ் பண்ணுறேன்... நேத்து பாத்த பூக்களைப்பறிக்காதீர்கள் பட நினைவாகவே இருக்குடா.." நாந்தான்... என நண்பன் நாகராஜ் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்...
தினமும் நானும் நாகராஜும் தான் பள்ளிக்கு ஒன்னாப்போவோம்...
அவன் இருக்கறது நாங்க இருக்கும் கிருஷ்ணாபுரத்துல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்கற ஊர்.. பள்ளிக்கூடம் ரெண்டு கிலோமீட்டர் தூரம்...வெங்கலம் என்கிற ஊர்ல இருக்கு.. பள்ளிக்கு ரெண்டு கிலோமீட்டர் நடந்து தான் போகனும்...
நாகராஜ் தினமும் எங்க வீட்டுக்கு வந்து என்னையும் கூப்பிட்டுக்கிட்டு தான் போவான்... நாங்க ரெண்டுப்பேரும் ஒரே க்ளாஸ்...5ம் வகுப்பு...'C' பிரிவு...
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு சின்ன பிளாஷ்பேக்...
நான் 4ம் வகுப்பு வரைக்கும் நகரத்துல இங்லீஸ் மீடியத்துல தான் படிச்சுக்கிட்டிருந்தேன்...அப்பாவுக்கு மாற்றல் ஆகி கிருஷ்ணாபுரம் வரும் வரைக்கும்...
இது ரொம்ப சின்ன கிராமம்...
'வெண்கலம்' அரசு பள்ளி...தமிழ் மீடியத்துக்கு மாறுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்...ஆனா இப்போ சமாளிச்சுக்கிட்டேன்...
என் நிறம் கொஞ்சம் வெளுப்பு என்கிறதால என் கூட படிக்கற பசங்க எல்லாம்..என்னைய "வெள்ளையா"ன்னு சொல்லி கூப்பிடுவாங்க..
அதிலும்... நித்தின்ன்னு ஒரு நண்பன்..'வெள்ளையனே வெளியேன்னு' சொல்லி கோபப்படுத்துவான்....ஆறுதலுக்கு அந்த ஊர்க்கோவில் ஐயர் பையனும் கூட படிச்சான்.. ஆனா அவன் நிறத்துல வெள்ளைனாலும் அந்த ஊர்ல பிறந்து வளர்ந்தவன் கிறதால... நான் தான் அன்னியமா தெரிஞ்சேன்...
நகரத்துல இருந்தப்பக்கூட ஐயர் வீட்டுப்பசங்க பலர் என்னைய அவங்க ஆளுன்னே நினைச்சிருந்தாங்க.. அதுல என் ப்ரண்ட்ஸ்..கௌதம் ..வாசுன்னு ரெண்டு பேரு... நானும் கௌதமும் ரஜினி ஃபேன்ஸ்... ஆனா வாசு மட்டும் கமல் ஃபேன்...ஏன்னு கேட்டா... வாசு சொல்லுவான்.."ரஜினி சூத்தரவாள் டா... கமல் தான் நம்மாளுன்னு"... அதுக்கு அர்த்தம் தெரியாது...ஆனா அதிலிருந்து எனக்கே கமல் தான் பிடிச்ச நடிகரா தோனுனாறு.. அப்பாக்கிட்ட கூட கேட்டிருக்கேன்.. "சூத்தரவாள்ன்னா.. என்னப்பா...நாம ஐயருங்க கிடையாது..அப்ப நாம சூத்தரவா தானே"ன்னு இன்னைக்கு வரைக்கும் சொல்லலை.."பேசாம போடான்னு" சொல்லிடுவாரு..."சூத்தரவாள்ன்னா ஐயர் இல்லாதவங்கன்னு" நானே நினைச்சுப்பேன்... இந்த நினைப்பு எல்லாம் கொஞ்சம் சரியானது இந்த ஊர்... சூழ்னிலை.. மக்களால தான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டேய்.. கிளம்பலாம்டா" ந்னு நாகராஜ் கூப்பிட்டான்.. ரெண்டு பேரும் நடக்கத் தொடங்கினோம்...
அனேகமா தார்ரோடு வழியாத்தன் போவோம்.. சில நாட்கள் குறுக்கு வழியில் போவதுண்டு...தார்ரோட்டு வழியில் போகும் வழியே ...ரெண்டு மயான இடங்கள் வரும்.. சாலையோரம்...
அதையெல்லாம் கடந்து போனால்.. ஒரு வளைவில் பாலம் கடந்து போகனும்...
இன்னைக்கு அந்த பாலம் தெரியத் தொடங்கும் முன்னரே அங்க‌.. ஓரத்துல ...யாரே படுத்திருப்பது போல தெரிந்தது.......

தொடரும்...

கருத்துகள் இல்லை: