இனிய இளவேனிற்கால விடியற்காலை. விடிந்தும் விடியாமலும்... பொழுது புலர்ந்தும் புலராததுமான ஒரு நேரம்.
அனைவருக்கும் இவ்வேளையில் வரும் ஆழ்ந்த உறக்கம் என்னக்குள்ளும்... புரண்டு படுக்கையில்... உள்ள்ங்கையில் ஏதோ ஒரு நெருடல்... தொட்டுப் பார்க்கின்றேன்...
நல்ல தூக்கத்தின் ஊடே... மீண்டும் கையில் அகப்பட... இந்த முறை விட்டுவிடக்கூடாது.. கவனமுடன் துழாவி... கிடைத்துவிட்டது... பிடிக்கின்றேன்...
மீண்டும் நழுவல்.. அடச்சே.. நிம்மதியாக தூக்கக் கூட முடியவில்லையே... மீண்டும் இருத்து பிடிக்கின்றேன்.. மிகவும் மிருதுவான.. வளவளப்பான.. ஒரு வஸ்து...
இம்முறை மீண்டும் பிடி கொடுத்து... சென்றது.. தற்போது நிறைய.. அகப்பட்டது... அவ்வேளையில்.. ஏதோ.. தலையில் மின்னலடிக்கும் வலி...
என்ன தொடர்போ... மீண்டும் கையருகே தட்டுப்பட...
சிக்'கெனப் பிடித்தேன்... இழுத்தேன்...
ஐயோ... அம்மா... வலி உயிர் போனது...
அடக் கருமமே...
ரெண்டு மாதங்களாக... வெட்டப்படாத... பங்க் எனும் புது பேஷனுக்காக வளாத்த... என் முடிக்கற்றை தான் அது....
ஞாயிறு, டிசம்பர் 16, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக