புதன், மார்ச் 14, 2007

கனாக்காலம்!

அழகானவை,
எனக்குப் பிடித்தமானவை
எல்லாம்
பார்த்து ரசிக்க மட்டும்தானா?

விண்மீன் கள் - லட்சக்கணக்கில்
கொட்டிக்கிடக்கும்
வானம் எனக்குப் பிடிக்கும்
ஆனால் அவைகளை
எட்டிப்பிடிக்க சாத்தியமில்லை...

பஞ்சு மெத்தைகளைச் சுமந்த
நீல நிற வானமும் எனக்குப் பிடிக்கும்
ஆனால் அவைகளை
தொட்டுப் பிடிக்க சாத்தியமில்லை...

விண்மீன் துடிப்பும்
வெண் மேக
அழகும் கொண்ட உன்னையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
ஆனால்,
உன்னை
எட்டிப்பிடிக்க... தொட்டுப்பிடிக்க
சாத்தியமில்லை தானே...

எனக்குப் பிடித்தமானவை
எல்லாம்
பார்த்து ரசிக்க மட்டும் தானா??!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ கதிரவள் என்றால் (கதிரவனின் பெண்பால் கதிரவள் தானே??!!)
நான் சந்திரன்
- உன்னால் உயிர் வாழ்பவன் நான்
நீ உயிரென்றால்
நான் உடல்
நீ இல்லாமல் இருக்கிறேன் இப்போது...
நீ வருவாயோ எப்போது??!!
~~~~~~~~~~~~~~~~~~~

என் தேடல்கள்
என் சாடல்கள்
என் துக்கங்கள்
என் உற்சாகங்கள்

எல்லாம் நீயாக இருக்க
உன்னைக் கண்ட நாள் முதல்
நான் மட்டும் ஏன் நானாக இல்லை ??!!
~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை: