என் முதல் காதல்... மறக்க முடியாதது!
அவள் என் எதிர் வீட்டுப்பெண் தான்.
காலையில் பள்ளிக்கு போகும் போதும் சரி...சும்மா வெளியே வந்தாலே என் கண்கள் அங்கேயே அலை பாயும்.
அவள் எப்போதும் மிதி வண்டியில் தான் எங்கேயும் செல்வாள்.
இதனால், அவள் வீட்டில் இருக்கிறாளா...இல்லையா என சுலபமாக எனக்குத் தெரியும்...எப்போதும் நானும் அதே சமயத்தில் வெளியே கிளம்பிடுவேன். ஆனால் இது வெறும் கண்பேசும் வார்த்தைகள் தான்.
கூட இருந்த சக நண்பர்கள் தான் அதிகம் என்னை ஏற்றி விட்டது.
இப்படியே நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் போய் கொண்டிருந்தது. பார்க்கும் போதெல்லாம் ஒரு சிறு புன்னகையுடன் தொடர்ந்தது.
ஆனால் ஒரு 'Hello' அல்லது 'hai' கூட சொன்னதில்லை.
ஒரு நாள் தலையில் இடியென அவர்களின் பணி மாற்றல் செய்தி... அப்போது கூட பேச தைரியம் இல்லை...
அது ஒரு கனாக்காலம். ..ஆன.. கானல் காலம்!
இன்னும் சொல்கிறேன்!...
சனி, அக்டோபர் 07, 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக